ENTER

இரங்கல்

மதுரை மாவட்டம், மேலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் திரு. கே. கார்த்திகேயன், வயது 38 / ஆண், (1993 - 1996 பேட்ச்) ஆண் செவிலியர், அவர்கள் இன்று அதிகாலை சுமார் 12 .30 மணி அளவில் அகால மரணமடைந்தார்.

அவரின் பிரிவால் வாடும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்

மற்றும் அனைத்து செவிலியர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

செவிலியர் தின வாழ்த்துக்கள் (2013)

அனைத்து செவிலியர்களுக்கும் உலக் செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்

2013 ஆம் வருடத்தில் செவிலியர் தினத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்,

இந்நேரத்தில் செவிலியர்கள் ஒன்றுபட்டு அவர்களின் உரிமைகளை மீட்டு எடுக்க முற்பட்டோமா என்றால்?

இல்லை எனலாம்,

இந்திய செவிலிய குழுமம் பல்வேறு செயல்களை செய்து செவிலிய துறையின் மாண்பினை மீட்டு வருகிறது

ஆனால் அதிகாரம் கொண்ட அமைப்பாக அது இருக்கிறதா என்றால்?

இல்லை?

இந்தியா முழுவதும்  செவிலியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது,
குறைந்த ஊதியம் அதிகபட்ச வேலை என செவிலியர்கள் கொத்தடிமைகளாக மட்டுமே பாவிக்கப்படுகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

தமிழக செவிலிய துறையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக செவிலியர்கள்  தர்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.

இது அரசு மற்றும் அரசு சார்ந்த இயக்ககமும் செவிலியர்களிடையே ஒரு பொறுப்பு அற்ற நிலையை உருவாக்கி அவர்களின் உரிமைகளை மறுக்க அல்லது மறைக்கப் எடுத்த முடிவாகும்.

இன்றைய சூழ்நிலையில் செவிலியர்களின் சமூக அந்தஸ்து என்பது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. இதனை மாற்ற வெளியில் இருந்து ஏதாவது சக்தி வரும் என எதிர்பார்ப்பது தவறு.

 “தனி இயக்ககம் வேண்டும்!”

தமிழக செவிலியர்களின் உரிமைகளை மீட்டு எடுக்க அனைவரும் ஒன்று பட்டு, செவிலியர்களால் நியமிக்கப்படும் ஒரு இயக்ககம் பெற வேண்டும், இப்போது இருக்கும் செவிலிய துறை தொடர்பான இயக்கக அதிகாரிகள் செவிலியர் நலன் விரும்பிகளாக இல்லை என்பது நிதர்சனஉண்மை.


செவிலியர்கள் நாம் ஒன்றுபட்டு, நமது உரிமைகளை மீட்க வேண்டும், உலகத்து செவியரிடையே  ஒற்றுமை ஓங்க வேண்டும்

நன்றி


இப்படிக்கு
உமாபதி 
Read more ...

NCD & CEMONC Government Order for Enhanement Contractual Pay

தமிழக அரசு மருத்துவமனைகளில் NCD மற்றும் CEMONC திட்டங்ககளில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு அரசானை வெளியிடப்பட்டு உள்ளது.


Read more ...

Nursing Superintendent Grade - II Panel List for 2012 - 13

தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, செவிலிய கண்காணிப்பாளர் நிலை - 2 பதவி உயர்வு அளிப்பதற்கான பணி மூப்பு  பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

PLEASE CLICK HERE TO DOWNLOAD NURSING SUPERINTENDENT GRADE II PANEL LIST FOR 2012 - 13

முதல் பக்கம் தெளிவாக இல்லை, தெளிவாக கிடைத்தைவர்கள் அனுப்பி உதவவும்
நன்றி.
email address:- tnnurse.org@gmail.com

Read more ...

TGCNWA's மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது அது தொடர்பான விவரங்களை பெற
www tnfwebsite com  என்ற இணைய தளத்தினை காணவும் 
Read more ...

RCH ஒப்பந்த செவிலியர்களின் ஊதிய உயர்வும் சில விளக்கங்களும், தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்களின் ஊதியம் அரசாணை (நிலை) எண்:- 342 நாள்:- 14/12/2012 வழி உயர்த்தி வழங்கப்பட்டது. அந்த அரசாணையில் சில புரிதல்கள் தேவைப்பட்டதால் அது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் வழி தகவல்கள் கோரப்பட்டது.
 
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் N.R.H.M - TN, DIRECTOR அவர்களிடம் இருந்து பெறட்ட  அதிகார பூர்வ தகவல்கள் இங்கு அனைத்து செவிலியர்களின் பயன்பாட்டிற்காக தரப்பட்டுள்ளது
 
1. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு காரணங்களால் RCH Scheme இன் கீழ் இரண்டு செவிலியர்(each staff done 12 hours duty) மட்டுமே பணி புரிகின்றனர். அவர்களுக்கு அரசு ஆணை எண் 342 இன் படி, அவர்கள் 01/04/2012 முதல் பார்த்த கூடுதல் பணி நேரத்திற்கு (each staff done 12 hours duty) ரூபாய் 1000 நிலுவை தொகை வழங்க பட வேண்டுமா என்ற தகவல்
 
தகவல்:  அரசாணை வெளியான தேதியில் (14/12/2012) இருந்து வழங்கப் பட வேண்டும்
 

2. அரசு ஆணை எண் 342 (பிரிவு 4/II) இன் படி 01/04/2012 முதல் ஒவ்வொரு மாதமும் 7 நாட்களுக்கு குறைவாக அவர்கள் பார்த்த கூடுதல் பணி நேரத்திற்கு ஒரு நாளைக்கு ரூபாய் 100 நிலுவை தொகை வழங்க பட வேண்டுமா என்ற தகவல்
 
தகவல்:  அரசாணை வெளியான தேதியில் (14/12/2012) இருந்து வழங்கப் பட வேண்டும்
 

3. அரசு ஆணை எண் 342 படி மாதம் ரூபாய் 1000  அலவன்ஸ் பெற (additional allowance of Rs. 1000 each per month for taking up 12 hours duty continuously for 7 days to 31 days) பெற 7 முதல் 31 நாள் வரை தொடர்ந்து பணி புரிய வேண்டுமா என்ற தகவல் 
 
தகவல்ஆம் (வார ஓய்வினை தவிர்த்து)
 

4. அவ்வாறு அவர்கள் 7 முதல் 31 நாள் வரை தொடர்ந்து பணி புரியும் போது அந்த 7 முதல் 31 நாட்களுக்கு இடையில் வார ஒய்வு அவர்களுக்கு உண்டா என்ற தகவல்
 
தகவல்: வார ஓய்வு உண்டு
 

5. அவ்வாறு ஒரு செவிலியருக்கு வார ஒய்வு அளிக்க பட்டால் மற்றொரு செவிலியர் எவ்வளவு நேரம் பணி புரியவேண்டும் என்ற தகவல்
 
தகவல்: செவிலியர் பணி அத்தியாவசிய பணியாக உள்ளதால் இரு செவிலியர்கள் பணியில் இருக்கும் போது ஒருவருக்கு வார ஓய்வு அளிக்கப்படின், மற்றொருவர் 12 மணி நேரம் பணிபுரியவேண்டும். மேலும் அடுத்த 12 மணி நேரம் ஏதேனும் அவசர தேவை ஏற்படும் போது (உதாரணமாக  கர்ப்பிணி பிரசவத்திற்கு வரும் போது) வந்து பணி புரியவேண்டும்.
 

6. இரண்டு செவிலியர் மட்டுமே பணிபுரியும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், ANM இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரு செவிலியர் விடுப்பிலோ அல்லது வார ஓய்விலோ செல்லும் போது மற்றொரு செவிலியர் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டுமா என்ற தகவல் 
 
தகவல்: செவிலியர் பணி அத்தியாவசிய பணியாக உள்ளதால் இரு செவிலியர்கள் பணியில் இருக்கும் போது ஒருவருக்கு வார ஓய்வு அளிக்கப்படின், மற்றொருவர் 12 மணி நேரம் பணிபுரியவேண்டும். மேலும் அடுத்த 12 மணி நேரம் ஏதேனும் அவசர தேவை ஏற்படும் போது (உதாரணமாக  கர்ப்பிணி பிரசவத்திற்கு வரும் போது) வந்து பணி புரியவேண்டும்.
 

7. ஒரு செவிலியர் வார ஓய்வில் இருக்கும் போது  மற்றொரு செவிலியர் பணியை முடித்து (after finish 12 hours duty) சென்று  CALL DUTY யில் வந்து பிரசவம் பார்த்தால் அவருக்கு அரசு ஆணை எண் 342 படி (பிரிவு 6/III/a) படி ரூபாய் 500 அலவன்ஸ் உண்டா என்ற தகவல்
 
தகவல்: உண்டு
 

8. அரசு ஆணை எண் 342 படி பிரிவு 4 உட்பிரிவு III இல் BEYOND THE REGULAR DUTY HOURS என்ற வார்த்தை பயன்படுத்த பட்டுள்ளது. REGULAR DUTY HOURS என்றால் எத்தனை மணி நேரம்  என்ற தகவல்
 
தகவல்:- ஒரு நாளில் மூவர்(SN, ANM) பணியில் இருக்கும் போது  ஒவ்வொருவரும் தொடர்ந்து 8 மணி நேரம் பணி புரியவேண்டும்
இருவர் பணியில் இருக்கும் போது 12 மணி நேரம் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியவேண்டும்.
 
 
9. மூன்று செவிலியர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்ற இரண்டு செவிலியர்கள் கண்டிப்பான முறையில் 12  மணி நேரம் பணி புரிய வேண்டுமா என்ற தகவல்
 
தகவல்:   ஆம், செவிலியர் பணி அத்தியாவசிய பணியாக உள்ளதால் 12 மணி நேரம் பணி புரிவது அத்தியாவசியமாகிறது.
 

10. மூன்று செவிலியர் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு செவிலியர் வார ஓய்வில் உள்ள போது மற்ற இரண்டு செவிலியர் பார்க்கும் 12 மணி நேர பணிக்கு ரூபாய் 100 அலவன்ஸ் உண்டா என்ற தகவல்
 
தகவல்:   ஆம்,
 

13. தமிழ்நாட்டில் NRHM project இன் கீழ் பணி புரியும் (RCH, MMU, NICU ) தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பொங்கல் போனஸ் உண்டா என்ற தகவல், உண்டு என்றால் அந்த தொகை எவ்வளவு என்ற தகவல், போனஸ் தொகை எந்த நிதி தொகுப்பில் (salary head) இருந்து வழங்க படும் என்ற தகவல்

தகவல்: இத்திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி நடைமுறை படுத்த பட்டுள்ளது. செவிலியர் உள்பட இத்திட்டத்தில் பணியாற்றும் தொகுப்புதியம் பெறும் அனைத்து பணியாளர்களுக்கும்  பொங்கல் போனஸ் வழங்கிட நிதி ஏதும் பெற படவில்லை.


PLEASE CLICK HERE TO DOWNLOAD THE ORIGINAL LETTER
Sincere Thanks to:-

Mr. S. Ravi
Staff Nurse


Read more ...

வருமான வரி கணக்கிடும் கருவி

செவிலியர்கள் அனைவரும் இந்த பிப்ரவரி மாதத்தில் வருமான வரியை கணக்கிட்டு, ஊதியம் பெற சமர்ப்பிக்க வேண்டும்,
வருமான வரி கணக்கிடுவது மிகவும் சவாலான செயலாக எண்ணப்படுகிறது.

இதனை எளிமைப்படுத்த இங்கு வருமான வரி கணக்கிடும் ஒரு Excel  File யினை தந்து உள்ளோம், 

Pay Drawn என்ற முதல் Sheet ல் உங்களின் ஊதிய விவரத்தினை அளிக்கவும், 

மேலும் இதன் சிறப்பு உங்கள் சேமிப்பு விவரத்தினை (HRA,PT,Housing Loan Interest,LIC,TUITION FEE,PLI,NSC,BOND,Housing Loan Principal, Fixed Deposits minimum 5 years,Education Loan Paid) போன்றவற்றினை Pay Drawn என்ற Sheet ல் அளித்தால் போதும், வருமான வரி கணக்கிடப்பட வேண்டிய இடத்தில் சரியாக பொருந்தி நீங்கள் செலுத்த வேண்டிய வருமான விவரத்தினை அளிக்கும்,

இதனை செவிலியர்கள் பயன்படுத்தி பலனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் 


IT Calculator தொடர்பான ஏதேனும் சந்தேகங்களுக்கு:- 9894011050


நன்றி:-
Read more ...

கிருஷ்ணகிரி HUD யில் பொங்கல் விழா கொண்டாடபட்டது

தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரி HUD யில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் பகிரப்பட்டது.























 
நன்றி திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள்

Read more ...

அஞ்சலி


டாக்டர்.பாக்கியலட்சுமி (வயது30).  மலைக்கோவிலூர் அரசு 

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். 

சேலம்-மதுரை பைபாஸ் ரோட்டில் கரூர் அருகே உள்ள சுக்காலியூர் 

ரவுண்டானா பகுதியில் அரசு வேனில் சென்ற போது அந்த வழியாக வந்த 

லாரியும், வேனும் மோதிக் கொண்டவிபத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்து 
  
இதில் வேனின் அடியில் டாக்டர் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 

டாக்டர்.பாக்கிய லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு 

தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 

கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி 

அவர் பரிதாபமாக இறந்தார்.இவரைப் பிர்ந்து வாடும் குடும்பத்தினருக்கு 

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இம் மரணம் எதிர்காலத்தில்  கவனிக்க வேண்டிய சில கேள்விகளையும் 

விட்டுச் சென்றுள்ளன.






1.விலைமதிப்பிலா உயிர்களான  மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பயணம் 

செய்யும் வாகனங்களுக்கு MMU,JSSK. போன்ற திட்டங்களுக்கு தற்காலிக 

தினக்கூலி ஓட்டுனர்களை நியமிப்பது நியாயமா?

2.வாகனங்களில் பயணம் செய்யக்கூடிய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 

விபத்துக்கான அதிக தொகைக்கான காப்பீட்டினை ஏன் அரசு 

செலுத்தக்கூடாது?


Courtesy


Read more ...