மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன

மருத்துவம் சார்ந்த 24 வகையான டிப்ளமோ - சான்றிதழ் படிப்புகள் 12.9.2011 முதல் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க 26 - ந்தேதி கடைசி நாள் 

தமிழக மருத்துவ கல்வி இயக்குநகரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் பிளஸ் - 2 தேர்வில் அறிவியல் பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 24 வகையான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும்,


எஸ்,எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவி செவிலியர் பயிற்சி ஆகியவற்றில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாட்டில் உள்ள 15 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் கிண்டியில் உள்ள கிங் நிலையத்திலும் 12.09.2011 முதல் 26.9.2011 பகல் 12 மணி வரை வழங்கப்படும்,

சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. 

ஆய்வகம், ரத்தம், டயாலிசஸ், முட நீக்கவியல், அறுவை அரங்கம், மயக்க மருந்து உதவியாளர், ஆகியவற்றில் பணிபுரிய ஏதுவான படிப்புகள், 

மருத்துவப்பதிவேடு நுட்பனர், செவிலியர் உதவியாளர் உள்பட 23 வகையான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இவற்றில் 19 சான்றிதழ் படிப்புகள். 4 டிப்ளமோ படிப்புகள்.
 
இந்த படிப்புகளுக்கு மொத்தம் 5 ஆயிரத்து 842 இடங்கள் உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ்-2 படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க வருகிற 26-ந் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 26.9.2011 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post