தொழிற்சங்க இலக்கணம்

தொழிலாளர் இயக்கம்

பத்தாயிரம் முறை விழும்;

எழும்; வடுபடும்; மீண்டும் எழும்;



அதன் குரல்வளை இருக்கப்படும்!

உணர்வற்று போகும்வரை !

தொண்டை அடைக்கப்படும்!



நீதிமன்றம்

கேள்விக்கணைகளைத் தொடுக்கும்

குண்டர்களால் தாக்கப்படும்!

பத்திரிக்கைகளால் வசை பாடப்படும்

பொது மக்களின் புருவ நெரிப்பும்கூட

போர் தொடுக்கும்;



அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்!

ஒடுகாளிகளால் மறுப்புரைகள் கூறப்படும்!

சூதாடிகளால் பலி கொடுக்கப்படும் !

உளவாளிகளின் ஒற்றறியும் நோயால்

பீடிக்கப்படும்!


கொலைகளால் நடு வீதியில் விடப்படும் !

துரோகிகளால் வஞ்சிக்கப்படும்!

அட்டைகளால் உறிஞ்சப்படும்!


தலைவர்களால் கூட விற்று விடப்படும் !

ஓ ......................


இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்

இந்த வையகம்

இதுவரை கண்டிராத உன்னத சக்தி வாய்ந்தது

உழைக்கும் மக்களின்

இயக்கம் ஒன்றுதான்!


ஆண்டாண்டு காலமாக

அடிமைப்பட்டிருக்கும் பாட்டளிகளை

விடுதலை செய்வதே

வரலாற்றுக் கடமையாகும்.

இதன் வெற்றி சர்வ நிச்சயம்

___________________________________________________________________
1904 ஆம் ஆண்டு தி மெட்டல் ஒர்க்கர் பத்திரிக்கையில்
ஈகிள்ஸ் ஸ்டெப்ஸ் என்னும் தொழிலாளியால் எழுதப்பட்டது
___________________________________________________________________

நன்றி :
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

Post a Comment

Previous Post Next Post