Skip to main content

செவிலியம் செழிக்குமா?

Whatsapp 96263 60763 என்ற எண்ணில் வந்த செய்தி, சில மாற்ங்களுடன்.

மருத்துவத்துறையில் முன்பு இல்லாத பிரச்சனைகள் தற்போது உருவெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் தொலைநோக்கு பார்வைஇன்மையும் , அலட்சியமும் ஆகும்.

10 வருடங்களுக்கு முன்பு வரை ஒரு வார்டில் சானிட்டரி ஒர்க்கர், லஸ்கர், ஹாஸ்பிடல் ஒர்க்கர், நர்சிங் அசிஸ்டெண்ட், நர்சஸ் என 5 பேர் பணிபுரிந்தனர்.

ஒரு குறிப்பிட்ட பணி நடக்கவில்லை எனில் அது சார்ந்த குறிப்பிட்ட நபருக்கு மெமோ எழுதப்பட்டு தனது மேலதிகாரிக்கு செவிலியர் தகவல் கொடுப்பார். விசாரணை செய்து பிரச்சனை தீர்க்கப்படும்.

ஆனால் இன்று ஆள்குறைப்பு என்ற பெயரில் லஸ்கர், ஹாஸ்பிடல் ஒர்க்கர், நர்சிங் அசிஸ்டெண்ட் என்ற 3 பணியிடங்களும் நிரப்பப்படுவதில்லை.
சானிட்டரி ஒர்க்கர் போன்றோரும் தனியார் மயமாக்களில் தனியார் வசம் சென்றுவிட்டது.

இதனால் மீதம் இருக்கும் செவிலியர்கள் மட்டும் பலிகடா ஆக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய விடயம் மட்டுமல்ல கண்டனத்துக்குரியதும், கவனிக்கப்படக்கூடியதும் கூட.

ஏனென்றால்,
யார் எதற்கு பொறுப்பு என்று தெரியாத அதிகாரிகளும், மருத்துவர்களும் பொதுமக்கள் போல நோயாளிகளுக்கு செவிலிய சேவை அளித்து வரும் செவிலியர்களை கேட்பது தொடர்ந்து கொண்டே உள்ளன.

இதனால் பாதிக்கப்படுவது, நோயாளிகளும், பொதுமக்களும், செவிலியர்களும் தான்.

இப்படித்தான் மருத்துவம் எனும் சேவை துறை இன்று வணிகமயமாகி வியாபாரம் ஆகிவிட்டது.

இதோ 6 மாதத்திற்கு முன்பு, பரவிய மர்மகாய்ச்சலின் போது அரசிடம் போதிய ஆய்வக நுப்புணர் இன்மையால் ரத்தமாதிரி எடுத்து பரிசோதிக்கும் பணியும் செவிலியர்கள் மீது திணிக்கப்பட்டது,

ரத்தமாதிரி பரிசோதனை எப்படி செய்வது என்று துளியும் அறியாத செவிலியர்கள் எப்படி இதை செய்வர் என்று கேள்வி எழுந்தபோது அனைத்தும் இயந்திர மயமாக்கப்பட்டுவிட்டது என்று கூறினர்.

ஆனால் அந்த அசாதாரண மற்றும் அவசர சூழ்நிலையில் லேப் பற்றியும், பரிசோதனை பற்றியும் 5 வருடமும் தனி பாடமாக படிப்படியாய் படித்த டாக்டர்கள் பக்கம் ஏன் அரசின் கவனம் செல்லவில்லை?

ஆனால் இன்று ரத்தம் மாதிரி எடுத்து சோதனை செய்வது செவிலியர் பணியாகவே ஆகிவிட்டது.

ஆம் ஐவர் செய்ய வேண்டியபணி ஒருவர்க்கு கொடுக்கப்பட்டு வருவது வஞ்சம் தானே!
அதை மன அழுத்ததோடு செய்துகொண்டு இருப்பது அடிமை தனம் தானே?
லேப் டெக் பணியும் சேர்த்ததில் நாம் அறுவர் பணி செய்துவருகிறோம்.

இது நாம் பெருமைப்படவேண்டியதல்ல.

இதோ இன்றுவரை மருத்துவமனைக்குள் மட்டும் வஞ்சிக்கப்பட்ட நாம், பொதுவெளியிலும் வஞ்சிப்புக்கு தயாராக்கப்பட்டுவருக்கிறோம்.

108 ஊழியர் போராட்டம் எனவே மக்கள் நலனை முன்னிட்டு  செவிலியர்கள் அப்பணியினை செய்வார்கள் என கூறிய ஆணை வியப்புக்குறியது அன்று.

செவிலியர்கள் மல்டி டெலண்ட் என்பது போய் மல்டி பார்பஸ் ஒர்க்கர் என்பதை தாண்டி,  மல்டி டாஸ்க் அடிமைகள் என்றாகி விட்டனர்.

மருந்தாளுனர்கள் போராட்டம் என்றால் செவிலிகள் மாத்திரை கொடுக்க வேண்டும்,

ஆய்வக நுட்புணர் போராட்டம் என்றால் செவிலியர்கள் பரிசோதனை செய்ய வேண்டும்.

லஸ்கர், ஹாஸ்பிடல் ஒர்க்கர், நர்சிங் அசிஸ்டெண்ட் இல்லையா , அப்பணியை செவிலியர்கள் செய்ய வேண்டும்.

இப்படி போனால் ஒரு நாள் மற்ற ஊழியர்கள் இல்லாமலே போவார்கள், அனைத்து பணியும் செவிலியர் வசம் ஒப்படைக்கப்படும்.

இப்போது எனக்கு சில சந்தேகம் ,

எவர் போராடினாலும் செவிலியர்கள் மீது பாயும் இந்த அதிகாரம் , மருத்துவர்கள் போராடும் போது மட்டும் ஏன் பாய்வதில்லை.

மருத்துவர்கள் போராடும் போது , மக்கள் நலன் கருதும் பேர்வழிகள் செவிலியர்கள் Independent Nurse Practice செய்ய வேண்டும் என கூறாதது ஏன்?

மக்கள் நலன் கருதி வெளிநாட்டிற்கு, தனியாருக்கு இணையாக அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த  நினைப்பவர்கள் , உள்கட்டமைப்பு வசதிகளிலும், பணியாளர்கள் நியமனத்திலும் அவர்களை பின்பற்றாமல் ,அவர்களோடு போட்டியிடாமல் இருப்பது ஏன்?

பிரச்சனைகள் வரும்போது மட்டும் செவிலியர்கள் நியாபகம் வரும் உங்களுக்கு என்னைக்காவது செவிலியர்கள் பிரச்சனை நியாபகம் வந்துருக்கா?.

மாதா மாதம் சரியா சம்பளம் வாங்கும் செவிலியர்கள் உண்டா.

கிளர்க்குகளின் பணிக்கு கூட கையூட்டு எதிர்பார்த்து காலம்கடத்தப்படுகிறது.

யூனிஃபாம் அலவன்ஸ் கிடைப்பதற்குள் நாங்கள் கிழிந்துவிடுகிறோம்.

செவிலியர்களுக்கு கழிவறைகள்  இல்லை.

செவிலியர்களின் சீருடையை மாற்றுங்கள்.

செவிலியர்களின் சமூக பழி போக்க Independent Nurse Practitioner Act கொண்டு வாருங்கள்.

செவிலியர்களுக்கு தனி இயக்குநரகம் அமையுங்கள்.

செவிலிய பணியை வளைவு இன்றி நேராக செய்ய ஆணையிடுங்கள்.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செவிலியர்களின் தேவையற்ற பணி சுமையை குறைத்து கொடுங்கள்.

நன்றி
96263 60763

Comments

  1. I regularly visit your site and find a lot of interesting information. Not only good posts but also great comments. Thank you and look forward to your page growing stronger.
    - 2 player games

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms