தமிழக அரசின் சுகாதார துறையில் செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதற்கு, மருத்துவ துறைகள் தேர்வு வாரியம் 2015 ஆம் ஆண்டு போட்டி தேர்வு நடத்தியது.
தமிழகத்தில் போட்டித்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து பணிகளும் நிரந்தரமாக (கால முறை ஊதியத்தில்) பணியமர்த்தினாலும், செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுகின்றனர்.
இது ஒட்டு மொத்த செவிலிய இனத்தை கொச்சைப்படுத்தினாலும், இதற்கு நிலவும் போட்டி, மற்றும் அரசு வேலை என்ற நினைப்பால் அனைத்து செவிலியர்களும் இதனை பெற துடிக்கின்றனர்.
MRB போட்டித்தேர்வு எழுதிய செவிலியர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.