Skip to main content

Posts

Showing posts from March, 2012

செவிலியர்களுக்கான விடுப்பு விண்ணப்பம் மாதிரி

செவிலியர்கள் தற்செயல் விடுப்பு கோரும் விடுப்பு விண்ணப்பம் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Casual Leave Form for Nurses

தமிழக சுகதரத்துறையில் உள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை

MEDICAL AND HEALTH (Govt.) 1. Modern Medicine ¨ Hospitals : 322+1* ¨ Dispensaries : 216 ¨ Mobile Medical Institutions :10 ¨ Primary Health Centres : 1539 ¨ Health Sub Centres : 8706 ¨ Beds Strength :59393 ¨ Doctors :13421 ¨ Total Nurses :41427 ¨ Nurses (DME) :6149 ¨ Nurses (DMS & RHS) :4831 ¨ Nurses (ESIl) :601 ¨ Nurses (DPH-Total) :17446 (a). Nurses (PHC) :5046 (b). Community Health Nurses :384 (c). SectorHealth Nurses :1531 (d). Village HealthNurses, (Auxiliary and MidwivesNurses) :10485 2. Indian Med

தகுதி நிலை, சிறப்பு நிலை செவிலியர்களின் ஊதியக்குழு நிர்ணய அரசாணை

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் பணிபுரியும் தகுதி நிலை, சிறப்பு நிலை செவிலியர்களுக்கான  ஊதியக்குழு நிர்ணய அரசாணை கடிதம் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்  இதனை அடிப்படையாக கொண்டு நமது இணயதளத்தில் வெளியிடப்பட்ட ஊதியக்குழு நிர்ணய மாதிரியினை பெற இங்கு கிளிக் செய்யவும்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வளரிளம் பெண்களுக்கான சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தினை இன்று (27.3.2012) துவங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (27.3.2012) தலைமைச் செயலகத்தில் 44 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் வளர் இளம் பெண்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொற்று நோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைப்பதற்காக சானிடரி நாப்கின்கள் (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் ஆகியோர் நலனுக்காக இலவசமாக சானிடரி நாப்கின்கள் (Sanitary Napkins) வழங்கப்படும். கிராமத்தில் வாழும் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு சானிடர் நாப்கின்கள் (Sanitary Napkins) கொண்ட ஒரு பை வீதம், மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 18 பைகள் ஒவ்வொரு வளர் இளம் பெண்ணுக்கும் வழங்கப்படும். இந்த சானிடரி நாப்கின்கள் அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், மற்ற வளர் இளம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட ம

தமிழக பட்ஜெட் 2012 - 2013 மக்கள் நலவாழ்வு துறை அறிவிப்புகள்

தமிழக பட்ஜெட் 2012 - 2013 :- தமிழக அரசின் நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், 2012-2013 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை, 2012 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 26 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து உரை ஆற்றினார் மக்கள் நலவாழ்வு துறையில் அளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் பிற பட்ஜெட் பலன்கள்   இங்கு தரப்பட்டுள்ளது. நன்றி: - தமிழக அரசின் இணையதளம் மக்கள் நல்வாழ்வு துறை  பிறப்பு இறப்பு விகிதம்:- மருத்துவத் துறையில் நமது நாட்டில் முன்னோடி மாநிலமாக தமிழகம் தொடர்ந்து விளங்குகிறது. இதற்குச் சான்றாக, பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்புகளுக்கு 24 ஆகவும், பேறுகால பெண்கள் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 79 ஆகவும் குறைந்துள்ளன. எதிர்பார்க்கப்படும் வாழ்வு காலம் ஆண்களுக்கு 71.8 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 75.2 ஆண்டுகளாகவும் உயர்ந்துள்ளது. பல புதிய முயற்சிகள் மூலமாக, செயல்பாடுகளை மேலும் உயர்த்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. நிதி ஒதுக்கீடு:- 2012-2013 ஆம் ஆண்டிற்கு, இந்த அரசு மருத்துவத் துறைக்கு 5,569.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதலமைச்சர

42 ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய்-சேய் நல மையங்களாக மேம்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

மக்கள் நல்வாழ்வு என்பது சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கப்பூர்வமான பங்கினை அளிக்க இயலும். இந்த வகையில் மக்கள் நல்வாழ்வுக்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில், எந்த நேரமும் அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் இதர பிரசவ சேவை மற்றும் மருத்துவ சேவை அளிக்கும் வகையில், ஒரு சுகாதார மாவட்டத்திற்கு 1 என்ற அடிப்படையில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள், அத்தகைய தாய்-சேய் நல மையங்களாக மேம்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த மையங்கள் கர்ப்பகால முன், பின் பராமரிப்பு, அவசர கால பிரசவ சேவை, பாதுகாப்பான கரு கலைப்பு, அறுவை சிகிச்சை சேவைகள் போன்ற பேறு சார் குழந்தைகள் நல சேவையினை வழங்கும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையங்களாக செயல்படும். இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் பணியாற்றுவதற்கு கூடுதலாக ஒரு மருத்து

செவிலியர்களுக்கான வேலைவாய்ப்புகள்

செவிலிய துறையில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகளை பிற  இணைய தளத்தில் இருந்து தொகுத்து பல்வேறு துறைகளின் வரியாக ஒருங்கமைக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்பு செய்திகளை பயன்படுத்தி கொள்ளவும்

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளின் விவரம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  செல்வி. ஜெயலலிதா அவர்கள் 11 .01 .2012 அன்று தலைமை செயலகத்தில்  அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் " முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை " தொடங்கி வைத்தார்கள். இந்த புதிய முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விவரம், அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகளின் வகைகள், மருத்துவரின் பரிந்துரை கடித மாதிரி மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ் மாதிரி இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் புதிய  இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்  மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முந்தைய இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் பட்டியலை பெற இங்கு கிளிக் செய்யவும் திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் பட்டியலை பெற இங்கு கிளிக் செய்யவும் மருத்துவ அலுவலரின் பரிந்துரை கடித மாதிய

மரு. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் அரசாணை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மரு. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் வழிகாட்டுதல் மற்றும் அரசாணை செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு ப்திவேற்றம் செய்யப்படுகிறது. அரசாணை பொதுசுகாதாரம் இன்று வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த அரசாணை மற்றும் வழிகாட்டுதல்களை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் மேலும் மரு. முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும் நன்றி பொது சுகாதாரம் இன்று வலைதளம்

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் (NHIS) இணைவதற்கான விண்ணப்பம்

1.06.2006 ற்கு பிறகு இணைந்த தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் (NHIS) (தொகுப்பூதியம், ஒப்பந்த ஊதியம், தினக்கூலி, 10(ஏ)1 பணியாளர்கள் தவிர)இணைக்கப்படுவர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் (NHIS) இணைவதற்கான விண்ணப்பம் இங்கு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும். Click Here to Download NHIS Application Form

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (CPS) இணைவதற்கான விண்ணப்பம்

தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுவர் (தொகுப்பூதியம், ஒப்பந்த ஊதியம், தினக்கூலி, 10 (ஏ) 1 பணியாளர்கள் தவிர) பங்களிப்பு ஓய்வூதியத்தில் இணைவதற்கான விண்ணப்பம் இங்கு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும். Click here to download CPS Application Form

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் செவிலியர்களை தொகுப்பூதியத்தில் அமர்த்திய அரசாணை

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் செவிலியர்களை தொகுப்பூதியத்தில் அமர்த்திய அரசாணை நகல் தமிழக அரசின் இணையதளத்தில் உள்ளது. அதன் வழி இங்கு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக தரப்பட்டுள்ளது. இந்த அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

செவிலியர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள்

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் பணிபுரியும் செவிலிய பணியாளர்களின் (Nursing Personnel) பணி மற்றும் பொறுப்புகள் பற்றி வெளியான சட்டம் இங்கு செவிலியர்களின் பயன்பாட்டிற்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட வரைவை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

இடமாற்ற கலந்தாய்விற்கான அரசின் சார்பு கடிதம்

தமிழக அரசின் சுகாதாரத் துறையில் உள்ள ஊழியர்களுக்கான இடமாற்ற கலந்தாய்வு நடத்த அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகள் மற்றும் அரசு சார்பு கடிதம் செவிலியர்களின் பயன்பாட்டிற்கு இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்  அரசாணை (2D) எண் 131 நாள் 20. 11. 2007 னை பெற இங்கு கிளிக் செய்யவும்

விடுமுறை காலத்தில் ரேசன் படியும் வழங்க அரசாணை

தமிழக அரசின் சுகாதாரத் துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு விடுமுறை காலத்தில் ரேசன் படியும் வழங்க வேண்டும் என வெளியிடப்பட்ட அரசாணை இங்கு செவிலியர்களின் பயண்பாட்டிற்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு செவிலியர்கள் தேவை

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தொழில்நுட்ப பிரிவிற்கு செவிலிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 20-03-2012. இது பற்றி வெளியான விளம்பரம் அறிய இங்கு கிளிக் செய்யவும் விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2012 ற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழக அரசின் பொது சுகாதார துறை சார்பாக செவிலியர்கள் மற்று செவிலியர் அல்லாத நபர்களுக்கு செல்வி. புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதிற்கான விவரம் மற்றும் விண்ணப்பங்களை பெற இங்கு கிளிக் செய்யவும்

தமிழக மருத்துவமனை மேலாண்மைத் திட்ட கணிப்பொறிகள் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு ஏற்பு கடிதம்

தமிழ்நாடு அரசு மருத்துவமனை மேலாண்மை திட்டத்திற்கு வழங்கப்பட்ட கணிப்பொறிகளை பராமரித்தல் மற்றும் பொறுப்பு ஏற்க அளிக்கப்பட்ட அறிவுறைகளின் கடித நகல் இங்கு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கடிதத்தினை தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி – 7.3.2012

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் எட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. பெற்ற உரிமைகளை பேணிக் காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் இந்நாளை பெண்கள் உரித்தாக்குகின்றனர். இந்த நன்னாளில், அனைத்து மகளிர்க்கும் எனது இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். பெண் என்பவள் சக்தியின் உருவம். "மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா" என்று பெண்ணின் பெருமையை போற்றிப் பாடியிருக்கிறார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று முழங்கினார் மகாகவி பாரதியார். "வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள், மணவாளன் இறந்தால் மணத்தல் தீதோ"" என்று கைம்பெண் மணத்தை வலியுறுத்தினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்கப் பாடுபட்டார் ராசாராம் மோகன் ராய். பெண்களை அடிமைப்படுத்தியதனால் தான் பாரத நாடு முன்னேறவில்லை என்பதை உணர்ந்து, பெண் விடுதலைக்காக திரு.வி.க. அவர்களும், மகாத்மா காந்தி அவர்களும் பாடுபட்டனர். உலகத்தில் எந்த

அனைத்து செவிலியர்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்

சர்வதேச மகளிர் தினம்: சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 08 ஆம் தேதி) உலகெங்கும் கொண்டாடப்படுகிறது, உழைக்கும் பெண்களின் உரிமைகளை காக்கவும், ஓட்டுரிமை கேட்டும், உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கேட்டும் --- நடத்தப்பட்ட ஒரு போராட்டமே இன்று சர்வதேச அளவில் மகளிர் தினமாக கொண்டாட வழி வகுத்தது என்றால் அது மிகை ஆகாது International Women,s Day Logo: பெண்களின் உரிமைகள்: பெண்களின் நிலை கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கி இருந்து வந்தது, ஆண் பெண் ஏற்ற இறக்கம், ஆணுக்கு பெண் சமம் இல்லா நிலை நீடித்து, பெண்களை அடிமையாகவும், வீட்டிற்குள்ளும் பூட்டி வைத்து இருந்தனர் இந்த நிலை பெண்களின் குரலினை உயர்த்தி அவர்களின் உரிமைகளை கேட்க வைத்தது முதல் போராட்டம்: 1908 ஆம் ஆண்டு 15000 மகளிர் “குறைந்த வேலை நேரம், தகுந்த ஊதியம், ஓட்டுரிமை” கேட்டு நியூயார்க் நகரினை முற்றுகை இட்டு போராட்டம் செய்தனர், இது அனைத்து பெண்ணினத்தையும் எழுச்சியுறச் செய்தது முதல் மகளிர் தின கோரிக்கை: 1910 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே நாளில் பெண்களுக்கான ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது, அதன் விளைவா

இடமாற்ற கலந்தாய்வு பற்றி தமிழக அரசின் செய்திக்குறிப்பு

தமிழக அரசின் சுகாதார துறையில் இடமாற்ற கலந்தாய்வுகள் நடைபெறும் நாட்களின் செய்திகள் தமிழக அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு வெளியிடப்படுகிறது. இந்த செய்திக்குறிப்பை தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும்

பகவான் வைகுண்டசுவாமி அவர்களின் பிறந்தநாள் மாதச்சார்பு விடுப்புகளில் இணைத்ததற்கான அரசாணை

பகவான் வைகுணடசுவாமி அவர்களின் பிறந்தநாள் மாதச்சார்பு விடுப்புகளில் இணைத்ததற்கான அரசாணை அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு மீண்டும் வெளியிடப்படுகிறது. அரசாணையை தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும்